வட அமெரிக்கா

கனடாவை உலுக்கிய காட்டுத்தீ – இரவு பகல் தெரியாத அளவிற்கு பாதிப்பு

கனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் இரவு பகல் தெரியாத அளவிற்கு காட்டுத் தீ உலுக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரணமாக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்தில் 15,000 குடும்பங்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கிலோனா (Kelowna) என்னும் நகரில் ஏற்கனவே 2,400-க்கும் அதிகமான இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

இன்னும் பல்லாயிரம்பேர் வெளியேறத் தயார்நிலையில் உள்ளனர். அங்கு 150,000 பேர் வசிக்கின்றனர்.

இரவைப் பகலாக்கும் அளவுக்குத் தீ பல இடங்களில் கொழுந்துவிட்டு எரிவதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகைமூட்டம் நகரை ஒரு போர்வைபோல் போர்த்தியுள்ளதாக அவர்கள் வருணித்தனர்.

இன்னும் கடுமையான காற்று வீசக்கூடும் என்பதால் நிலைமை மேலும் மோசமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சிரமமான இந்தக் கோடைக்காலத்தைச் சமாளிக்கும் ஏற்பாடுகளைச் செய்துவருவதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content