கலிபோர்னியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ – பிராணிகளை காக்க குவிந்த தன்னார்வலர்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளது.
மாகாணத்தில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட வீட்டு விலங்குகளை காக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தீயால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தனியே தவித்து நிற்கும் வளர்ப்பு பிராணிகளை கண்டறிந்து முகாம்களுக்கு கொண்டு வரும் பணியில் விலங்கு நல ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்கு நடுவில் குளிரில் நடுங்கி கிடந்த நாய்,மற்றும் 400 க்கும் மேற்பட்ட குதிரைகள், கழுதைகள் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டுள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)