வட அமெரிக்கா

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத் தீ – 19,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலை

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகே ஏற்பட்டுள்ள புதிய காட்டுத் தீச்சம்பவத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.

கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயால் 19,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.

பலத்த காற்று தீயை மேலும் தீவிரப்படுத்தியது. இதற்கு முன்னர் எரிந்த பெருந்தீயை அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

சில மணி நேரத்தில் மேலும் ஒரு தீச்சம்பவம் ஏற்பட்டது. சுமார் 1,100 தீயணைப்பாளர்கள் அயராது உழைக்கின்றனர்.

நிலைமை குறித்து கவனத்தோடு இருக்கும்படி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்