ஐரோப்பா

கிரீஸில் இரண்டாவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ : பயண எச்சரிக்கை புதுப்பிப்பு!

கிரீஸில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும் (02.07) முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிலையில் கிரீஸுக்குப் பயணிக்கும் மற்றும் அங்கிருந்து வரும் அனைவருக்கும் ஒரு முக்கியமான புதுப்பிப்பை ஜெட்2 பட்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கிரீஸ் தீவான காஸ் தீவில் உள்ள கர்தமேனா பகுதி தற்போது கடுமையான காட்டுத்தீ காரணமாக எச்சரிக்கையாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏறபட்டுள்ளது.

நீடித்த வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை மற்றும் பலத்த காற்றுடன் இணைந்து காட்டுத்தீ ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. கிரீஸ் வெப்பமான மாதங்களில் கடுமையான வானிலைக்கு பெயர் பெற்றது, எனவே பாதுகாப்பாக இருக்க, வழிகாட்டுதலை கவனமாக பின்பற்றுவது முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(Visited 38 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்