இலங்கை

பிரபல நடிகரின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

பிரபல நடிகர் கவிங்க பெரேராவின் முன்னாள் மனைவி என தெரிவிக்கப்படும் 37 வயதுடைய பெண் ஒருவர், ஆகஸ்ட் 5 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட பயணத்தடையை தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குருநாகலை வசிப்பிடமாகவும், தொழில் ரீதியாக வைத்தியருமான குறித்த பெண், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-192 இல் இந்தியாவின் புது டெல்லியில் இருந்து வந்தடைந்த போது காலை 8:50 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!