இலங்கை

உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டவில்லை? சஜித் கேள்வி

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ள குழுக்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவது அதிபர் தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதலை முன்னிலைப்படுத்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்ததன் காரணமாக மக்கள் ஆணையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த 134 பேரால் தற்போதைய அதிபர் நியமிக்கப்பட்டதன் அடிப்படையில் ஈஸடர் தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளை கண்டறியும் பொறுப்பும் உண்மையை கண்டறியும் பொறுப்பும் தற்போதைய அதிபருக்கு உண்டு என குறிப்பிட்டார்.

இந்நேரத்தில் யாரும் பேதம் பாராது அனைவரும் உண்மையை பேச வேண்டும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்ட பிணங்கள் மீது நடந்திய அந்த அரசியலை தாம் நிராகரிப்பதாகவும், இந்நேரத்தில் உண்மை நாட்டுக்கு தேவைப்பட்டாலும், அரசாங்கம் இந்த உண்மையை மறைப்பது எந்த தரப்பை பாதுகாக்கவென கேள்வி எழுப்பினார்.அரசாங்கம் தொடர்ந்து உண்மையை மறைத்தால், பயங்கரவாதத்திற்கு எதிராக எதிர்க்கட்சி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தென்னை உற்பத்தி செய்யும் விவசாயிகள் குழுவுடனான சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.மேலும், ஈஸ்டர் தாக்குதலினால் இந்நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியின் பின்னணியில், திட்டமிட்டவர்கள், பிரதானமாக செயற்பட்டவர்கள், பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டவர்கள் தொடர்பாக ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து உண்மை என்னவென்று கேள்வி எழுப்பினார்.சர்வதேச நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்புகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடக்க ஏற்பாட்டு குழு குறித்து சந்தேகத்திற்கிடமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில் உண்மை என்ன?உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content