இந்தியா

அமெரிக்க அதிபரை கவர்ந்த 12 வயது சிறுமி யார்?.. வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்றிரவு டெல்லிக்கு சென்றார்.

அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்றவர்களில் சிறுமி ஒருவரும் இருந்தார். அந்த சிறுமியிடம் ஜோ பைடன் சிறிது நேரம் பேசியது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. யார் அந்த 12 வயது சிறுமி? என்று இந்திய ஊடகங்களில் விவாதங்கள் சென்றன.

தொடர் விசாரணையில், அந்த சிறுமி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் மகள் மாயா என்பது தெரியவந்தது.

ஏற்கனவே கார்செட்டி இந்தியாவில் பணியாற்றிய காலத்தில் அவரது மகள் மாயாவின் படங்கள் வெளியாகின. இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருக்கும் எரிக் கார்செட்டி, 2013 முதல் 2022 வரை லாஸ் ஏஞ்சல்ஸின் மேயராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content