பட்டர் சிக்கன் உணவை யார் கண்டுப்பிடித்தது : நீதிமன்றத்தில் வழக்கு பதிவு!
![](https://iftamil.com/wp-content/uploads/2024/01/butter-jpg.webp)
இந்தியாவில் பிரபலமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகின்ற உணவுதான் பட்டர் சிக்கன். இந்த உணவை யார் செய்தார்கள் அல்லது முதலில் யார் கொண்டுவந்தது என்பது சர்சைக்குரிய ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தை எட்டியுள்ளது. இரண்டு டெல்லி உணவகங்கள், அசல் பட்டர் சிக்கன் ரெசிபியின் இல்லம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் உரிமையை பெற்றுள்ளன.
இந்தியாவின் பிரபலமான உணவகங்களில் ஒன்றான மோதி மஹாலை நடத்தும் குடும்பத்தினரால் இது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது.
குஜ்ரால் குடும்பத்தின் கூற்றுப்படி, இந்த உணவு அவர்களின் தாத்தா குந்தன் லால் குஜ்ரால் உருவாக்கியது. அவர் இப்போது பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் உணவகத்தை நிறுவியுள்ளார். 1947ல் பிரிவினையின் போது இந்தியா பிளவுபட்ட பிறகு, அந்த உணவகத்தை டெல்லிக்கு மாற்றினர்.
தந்தூர் அடுப்பில் சமைக்கப்பட்ட மென்மையான கோழித் துண்டுகளை உள்ளடக்கிய சுவையான கறி, வெண்ணெய் மற்றும் க்ரீம் நிறைந்த தக்காளி கிரேவியில் கலந்து, மீதமுள்ள தந்தூர் கோழியைப் பயன்படுத்த குஜ்ரால் 1930 களில் கண்டுபிடித்ததாக அவர்கள் கூறுகிறார்கள்.
“ஒருவரின் பாரம்பரியத்தை நீங்கள் பறிக்க முடியாது … எங்கள் தாத்தா பாகிஸ்தானில் இருந்தபோது இந்த உணவு கண்டுபிடிக்கப்பட்டது” என்று மோதி மஹாலின் நிர்வாக இயக்குனர் மோனிஷ் குஜ்ரால் ராய்ட்டர்ஸிடம் கூறியுள்ளார்.
ஆனால் போட்டி உணவகமான தர்யாகஞ்ச் பட்டர் கோழியின் தோற்றத்திற்கு உரிமை கோரியுள்ளது. 1947 ஆம் ஆண்டு குஜ்ரால் தனது உணவகத்தை டெல்லிக்கு மாற்றியபோது, அவர்களது உறவினரான குந்தன் லால் ஜக்கி, அவருடன் பணிபுரிந்ததாகவும், அங்குதான் பட்டர் சிக்கன் உருவாக்கப்பட்டது என்றும் உணவக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் பட்டர் சிக்கன் கண்டுபிடிப்பாளர் என்ற பட்டத்திற்கான உரிமையை கோரி, குஜ்ரால் குடும்பம் $240,000 இழப்பீடு கோருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கு விசாரணை வரும் 05 மாதம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.