இலங்கை

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்? வெளியான தகவல்!

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் இந்த தகவல் வந்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் இந்தத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கிடையே  சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளுக்கும் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைய இயக்குநர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!