அரசியல் இலங்கை செய்தி

18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடக்கப்போவது என்ன?

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளதென தெரியவருகின்றது.

அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் சபாநாயகர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் 18 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ள நிலையிலேயே மேற்படி சந்திப்பும் இடம்பெறுகின்றது.

அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவும் கூடவுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் நோக்கிலேயே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண நிதிகளை வழங்குவதற்காக நிதி கோரும் குறைநிரப்பு பிரேரணை 18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதற்கு எதிரணி முழு ஆதரவை வழங்கும் என நம்பப்படுகின்றது.

 

 

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!