இலங்கை இளைஞனால் ரோமானிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

ரோமில் தனது காதலியை கொடுரமாக கொலை செய்த குற்றச்சாட்டில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
17 வயதுடைய இவ் இளைஞர் 17வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட யுவதியின் உடலில் பத்து கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும் குப்பைகளுக்கு மத்தியில் அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர்களுக்கு இடையே இடம் பெற்ற வாக்குவாதமே கொலையில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)