ஐரோப்பா

கியேவில் சந்திக்கும் மேற்கத்திய அதிகாரிகள் – ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை!

மேற்கத்திய அதிகாரிகள் கியேவில் சந்திக்கும் போது விளாடிமிர் புடின் “எந்த நேரத்திலும்” ஒரு “குறிப்பிடத்தக்க” வான்வழித் தாக்குதலை நடத்தக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், புதிய ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் ஆகியோர் உக்ரைனுக்கான புதிய அமைதித் திட்டங்களை வகுக்க உக்ரைன் தலைநகருக்கு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது.

தலைவர்கள் கியேவில் இருக்கும் காலத்தை உள்ளடக்கிய – இன்றிரவு நள்ளிரவு வரை மூன்று நாள் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பதாக விளாடிமிர் புடின் உறுதியளித்திருந்தார்,

ஆனால் போர்க்களத்தில் ஏற்கனவே பல முறை இதை மீறியுள்ளார், இன்று பிற்பகல் முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போது கியேவில் குண்டுகளை வீசக்கூடும் என்ற அச்சத்தை எழுப்பியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உக்ரைன் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம், அடுத்த சில நாட்களில் எந்த நேரத்திலும் நிகழக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்