வளைகுடா மோதல் – அதிக வரி செலவுகளைத் தவிர்க்க வேறு நாடுகளில் தங்கியுள்ள பிரித்தானிய செல்வந்தர்கள்
மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக தங்கள் நாட்டில் அதிக வரி செலவுகளைத் தவிர்க்க பிரித்தானிய செல்வந்தர்கள்
அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீர போன்ற நாடுகளில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வரி மற்றும் சுங்கக் கோரிக்கைகளை எதிர்கொள்வதால், அவர்கள் பிரித்தானியாவுக்கு திரும்பாமல் காத்திருப்பதாக The guardian செய்தி வெளியிட்டுள்ளது.
சிலர் “விதிவிலக்கான சூழ்நிலைகள்” விதியின் கீழ் 60 மேலதிக நாட்கள் வழங்கப்படுமா என்பது குறித்து பிரித்தானியாவின்
வரி மற்றும் சுங்கத்துறையிடம் வழிகாட்டுதலைக் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து வருடங்களுக்குக் குறைவாக வெளிநாட்டில் இருந்தவர்கள், திரும்பினால், நடப்பு ஆண்டிற்கான வருமான வரி மட்டுமே வரி மற்றும் சுங்கத்துறையின் வரம்பில் வரக்கூடும்.
வெளிநாட்டில் விற்பனை செய்யப்பட்ட சொத்துகள் அல்லது வணிகங்களுக்கான மூலதன வரி விதிக்கப்படும்.




