இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்கும்வரை போராடுவோம்: தமிழக முதல்வர் உறுதி!
இந்தியாவில் நீண்டகாலமாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்கும்வரை அதற்காக தி.மு.க. தொடர்ந்து குரல் எழுப்பும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் M.K. Stalin உறுதியளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 90 வீடுகளை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பின்னர் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம். நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் நீண்டகாலமாக வசித்து வருவோருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை வழங்குவதற்கு இந்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுவரை நம் குரல், தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்’ எனவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.





