மத்திய கிழக்கு

ஹமாஸை பூமியிலிருந்து முற்றிலும் துடைத்தெறிவோம்… இஸ்ரேலின் அதிரடி அறிவிப்பு!

ஹமாஸை இந்த பூமிப்பந்திலிருந்து முற்றிலுமாக துடைத்தெறிவோம். ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார் உட்பட அவரின் குழுவினர் எங்கள் பார்வையில் இருக்கின்றனர். விரைவில் நெருங்குவோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 7ம் திகதி முதல் நடந்துவருகிறது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 இஸ்ரேல் வாசிகள் கொல்லப்பட்டதாகவும், 199 பேரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது.

இதன்காரணமாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட 2,750க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து இஸ்ரேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், `ஹமாஸை இந்த பூமியிலிருந்து முற்றிலுமாக துடைத்தெறிவோம். போரை ஆரம்பித்தது ஹமாஸ் தான், எனவே போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை. ஹமாஸின் தலைவர் யாஹ்யா சின்வார் உட்பட அவரின் குழுவினர் எங்கள் பார்வையில் இருக்கின்றனர். விரைவில் நெருங்குவோம்’ என தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் போர் தீவிரமடைவதால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன.

(Visited 15 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!