ஞானசார தேரருக்கு பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப் பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் தனூஜா லக்மாலி இத்தீர்ப்பினை இன்று வழங்கினார்.
2014 ஆம் ஆண்டு கொழும்பு கொம்பனி தெரு வீதி Nippon hotel இல் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அல்குர்ஆனை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமையால் இப்பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2025 மார்ச் மாதம் 5 ஆம் திகதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
(Visited 12 times, 1 visits today)