இலங்கையில் அதிகவே நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை’!

இலங்கையில் ஆகஸ்ட் 1, 2025 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (01) காலை கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் ஆய்வு சுற்றுப்பயணத்தின் போது ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது இந்த உத்தரவை உறுதிப்படுத்தினார்.
சாலை விபத்துகளால் அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் இழக்கப்படுவதாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.