இலங்கை

VAT பெயரில் இலங்கை மக்களை ஏமாற்றும் கும்பலுக்கு எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல் போலியான இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வரி தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

நேரடி வரி சதவீதத்தை 40 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அது, VAT குறித்த விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகர்கள் ஒவ்வொரு மாதமும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு VAT செலுத்த வேண்டும் என நிதி அமைச்சின் நிதி திணைக்களத்தின் வரிகள் தொடர்பான ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார்.

வசூலிக்கப்படும் வரியை திணைக்களத்திற்கு வழங்காவிடின் அவ்வாறான நபர்களுக்கு எதிராக VAT சட்டத்தின் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

VAT வசூலிக்கத் தகுதியான வணிக வளாகங்களை அடையாளம் காண உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தால் வழங்கப்பட்ட உரிமம் கடைகளில் காண்பிக்கப்பட வேண்டும்.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட மாதிரியின் படியே ஒவ்வொரு உண்டியலும் தயாரிக்கப்பட்டு நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!