இலங்கை

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை – போலியான அழைப்புகள் தொடர்பில் அவதானம்

இலங்கையில் போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் நடைபெறும் நிதி மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 9 டிப்போகளில் பணிபுரியும் பல்வேறு ஊழியர்கள் இந்த போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான வாகனங்களை புதுப்பிப்பதற்கு 10 ஆயிரம் ரூபாவை உடனடியாக செலுத்த வேண்டும் என கூறி ஏமாற்றி இந்த நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான நிதி மோசடிகள் தொடர்பில் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நிதி மோசடிக்காக பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்களைச் சோதனையிட்ட போது அவை இறந்த நபர்கள் பயன்படுத்தியமை அல்லது சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வருகை தந்தவர்கள் பயன்படுத்தியமை என தெரியவந்துள்ளது.

எனவே, இவ்வாறான போலியான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 7 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content