இலங்கை செய்தி

பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்தும் எம்.பிகளுக்கு எச்சரிக்கை!

பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்திய சில எம்.பிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர்  ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது சில எம்.பிகள் அவைக்கு புறம்பான மொழியை பிரயோகித்தமை தொடர்பில் மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறி நிலையியற் கட்டளை 82.1 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே  சபாநாயகர் இவ்வாறு கூறினார்.

எம்.பி.க்கள் பயன்படுத்திய அத்தகைய வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய அமர்வின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்துவது குறித்து விசாரிக்குமாறு நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு அறிவுறுத்தியதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!