இலங்கை

டொலரின் தொடர் வீழ்ச்சி ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கையில் அண்மைக்காலமாக டொலருக்கு நிகரான  ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகிறது. இது மக்களிடையே சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டொலரின் தொடர் வீழ்ச்சி ஆபத்தானது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.

கடன்களை திருப்பிச் செலுத்துதல்,  பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் வெளிநாட்டு இருப்புகளை அதிகரிப்பதற்கான மத்திய வங்கியின் முயற்சிகள் போன்ற முக்கிய மூன்று காரணிகளுக்காக தான் இலங்கைக்கு டொலர் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டொலரின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது இலங்கையின் பொருளாதாரம் மேலும் சுருங்குவதற்கு வழிவகுக்கும் எனவும்,  இதன் காரணமாக பொதுமக்களின் துன்பங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!