இலங்கை

சமூக ஊடகங்கள் வழியாக இடம்பெறும் நிதிமோசடி தொடர்பில் எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் வழியாக நடத்தப்படும் மோசடிகள் அதிகரித்து வருவது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு பொதுமக்களை எச்சரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, சமூக ஊடக தளங்கள் மூலம் ஆன்லைன் மற்றும் நிதி மோசடிகளைச் செய்வதற்கான முயற்சிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை CERT எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சைபர் குற்றவாளிகள் வரவிருக்கும் பண்டிகை காலத்தையும் தற்போதைய வானிலை தொடர்பான பேரிடர் நிலைமைகளையும் பயன்படுத்தி பொதுமக்களின் நம்பிக்கையை பெற்று மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள், பொதுத் துறைகள், முக்கிய சில்லறை விற்பனை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என்று காட்டிக் கொள்ளும் நபர்கள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கணிசமான முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!