இலங்கையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை : இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு!
இலங்கையில் பலத்த மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்க வானிலை ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, மின்னலினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.





