மத்திய கிழக்கு

போர் பதற்றம்: இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ரத்து செய்யும் நிறுவனங்கள்

விமான நிறுவனங்கள் சில மத்திய கிழக்கு வான்வெளியைத் தவிர்க்கின்றன, பதட்டங்கள் அதிகரிக்கும் போது இஸ்ரேல் விமானங்களை ரத்து செய்கின்றன

இந்த வாரம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதக் குழுக்களின் மூத்த உறுப்பினர்கள் கொல்லப்பட்ட பின்னர் பிராந்தியத்தில் மோதல் ஏற்படக்கூடும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIAL.SI), வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் ஈரானிய வான்வெளியில் பறப்பதை நிறுத்திய புதிய தாவலைத் திறந்து, மாற்று வழிகளைப் பயன்படுத்துகிறது,

Delta மற்றும் United விமான சேவை நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேலுக்கான சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. புதன்கிழமை நள்ளிரவு முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக United அறிவித்துள்ளது.

மேலும், உரிய நடவடிக்கை பின்னர் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. Delta விமான சேவை நிறுவனம் தெரிவிக்கையில், தங்களின் இணைய பக்கமூடாக Air France மற்றும் EL AL Israel ஆகிய விமானங்களில் இஸ்ரேலுக்கு முன்பதிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஒகஸ்ட் 14க்கு முன் டெல்டா நிறுவனத்தில் டெல் அவிவ் அல்லது அங்கிருந்து பயணத்தை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே, Air Canada நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒக்டோபர் 15ம் திகதி வரையில் இஸ்ரேலுக்கான தங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

ரொறன்ரோவில் இருந்து ஒக்டோபர் 15ம் திகதி இஸ்ரேலுக்கு அடுத்த விமானம் புறப்பட உள்ளது. 2023 ஒக்டோபர் 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை அடுத்து பல விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு விமான சேவையை ரத்து செய்தது.

ஆனால் சில நிறுவனங்கள் பின்னர் சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content