ஆசியா

போர் பதற்றம்: ஏவுகணைச் சோதனை நடத்திய இந்தியா, பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சு ஏவுகணைச் சோதனைக்குத் திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர் பதற்றம் நிலவுகிறது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 சுற்றுப் பயணிகள் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், கராச்சி கடலோரப் பகுதியில் ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் தரையிலிருந்து இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை இந்தியாவின் அனைத்து அமைப்புகளும் உற்று கவனித்து வருவதாகவும் அது கூறியுள்ளது.

பாகிஸ்தானின் போர் விமானங்களை அந்நாட்டு எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, கடல்சார் இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைத்து தாக்கும் ஏவுகணைச் சோதனையை இந்தியாவும் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 24) நடத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள பதிவில்,”இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் கப்பலிலிருந்து கடல்சார் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைச் சோதனை வெற்றிப் பெற்றுள்ளதாகவும் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் அச்சோதனை மற்றொரு மைல்கல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்