போர் பதற்ற நெருக்கடி – இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவத்த அவர்
“வெள்ளிக்கிழமை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 க்கு ஊடக சந்திப்பொன்றும் நடைபெறவுள்ளது.
அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்.
ஜனாதிபதியின் கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்க விரும்பினால், வெள்ளிக்கிழமை அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.





