ஐரோப்பா

இங்கிலாந்தில் மீண்டும் பரவும் வைரஸ் தொற்று : பெரிய தொற்றுநோயை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை!

இங்கிலாந்தில் மீண்டும் ஒரு தொற்று வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு ஒரு பெரிய தொற்றுநோயை எதிர்கொள்ளக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கால்நடைகளிடையே பரவும் இந்த நோயானது பிரித்தானியாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டது. மனிதர்களுக்கு பாதிப்பில்லாதது என்றாலும், இது இறைச்சி மற்றும் பால் போன்ற விலங்கு பொருட்களை மாசுபடுத்தும்.

பாதிக்கப்பட்ட பசுக்களிடமிருந்து பச்சையாகப் பால் குடிப்பவர்களுடன் அரிதான வைரஸ் ஆபத்துக்கள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போது ஐரோப்பா முழுவதும் புதிய தொற்றுநோய்கள் கடுமையான கவலைகளை எழுப்புகின்றன. இந்த நோய் முதன்முதலில் மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு ஹங்கேரிய கால்நடை பண்ணையில் கண்டறியப்பட்டது.

இரண்டு வாரங்களுக்குள் அண்டை நாடான ஸ்லோவாக்கியாவில் உள்ள மூன்று பண்ணைகளுக்கு பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!