இங்கிலாந்தில் மீண்டும் பரவும் வைரஸ் தொற்று : பெரிய தொற்றுநோயை எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை!

இங்கிலாந்தில் மீண்டும் ஒரு தொற்று வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு ஒரு பெரிய தொற்றுநோயை எதிர்கொள்ளக்கூடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கால்நடைகளிடையே பரவும் இந்த நோயானது பிரித்தானியாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டது. மனிதர்களுக்கு பாதிப்பில்லாதது என்றாலும், இது இறைச்சி மற்றும் பால் போன்ற விலங்கு பொருட்களை மாசுபடுத்தும்.
பாதிக்கப்பட்ட பசுக்களிடமிருந்து பச்சையாகப் பால் குடிப்பவர்களுடன் அரிதான வைரஸ் ஆபத்துக்கள் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்போது ஐரோப்பா முழுவதும் புதிய தொற்றுநோய்கள் கடுமையான கவலைகளை எழுப்புகின்றன. இந்த நோய் முதன்முதலில் மார்ச் மாத தொடக்கத்தில் ஒரு ஹங்கேரிய கால்நடை பண்ணையில் கண்டறியப்பட்டது.
இரண்டு வாரங்களுக்குள் அண்டை நாடான ஸ்லோவாக்கியாவில் உள்ள மூன்று பண்ணைகளுக்கு பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.