செய்தி

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி

வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டி வரும் 19ஆம் தேதி தொடங்கும் நிலையில், இன்னும் 58 ரன்கள் எடுத்தால், விராட் கோலி கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எவரும் எட்டாத சாதனையை படைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. பல நாட்கள் கழித்து விராட் கோலியும், ரிஷப் பண்ட்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புவதால், இந்த டெஸ்ட் தொடருக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் விராட் கோலிக்கு கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இந்த டெஸ்ட் தொடரில் இன்னும் 58 ரன்களை எடுத்தால், கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த வீரராக விராட் கோலி இருப்பார்.

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் தான் குறைந்த இன்னிங்சில் 27,000 ரன்களை கடந்த வீரராக இருந்தார். அவர் 623 இன்னிங்சில் (226 டெஸ்ட், 396 ஓடிஐ, 1 டி20) 27,000 சர்வதேச ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். ஆனால் தற்போது விராட் கோலி அந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விராட் கோலி இதுவரை 113 டெஸ்ட் போட்டி, 295 ஓடிஐ மற்றும் 125 டி20 போட்டிகள் என மொத்தம் விளையாடி, மொத்தம் 533 இன்னிங்சில் 26,942 ரன்களை எடுத்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 3 வீரர்கள் மட்டுமே 27,000 ரன்களை கடந்துள்ளார்கள். குமார் சங்ககாரா மொத்தம் 666 இன்னிங்சில், 28,016 ரன்களும், ரிக்கி பாண்டிங் 668 இன்னிங்சில் 27,483 ரன்களையும் எடுத்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது விளையாடிவரும் வீரர்களில், ஜோ ரூட் 457 இன்னிங்சில் 19,817 ரன்களை எடுத்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content