வடக்கு அயர்லாந்தில் தொடர்ந்து இடம்பெறும் வன்முறை : தடியடி குண்டுகளை பயன்படுத்திய பொலிஸார்!

வடக்கு அயர்லாந்தின் பாலிமெனா நகரில் இரண்டாவது முறையாக நடந்த குடியேற்ற எதிர்ப்பு வன்முறையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது செங்கற்கள், பாட்டில்கள் மற்றும் பட்டாசுகளை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பெல்ஃபாஸ்டுக்கு வடக்கே 25 மைல் (40 கிமீ) தொலைவில் உள்ள நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் தண்ணீர் பீரங்கி மற்றும் பிளாஸ்டிக் தடியடி குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.
வார இறுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் நபரின் குடும்பத்திற்கு ஆதரவைக் காட்ட அமைதியான பேரணிக்குப் பிறகு திங்கட்கிழமை வன்முறை வெடித்தது. 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வயது காரணமாக சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்கத்கனது.
(Visited 2 times, 1 visits today)