இலங்கை

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!!

இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் தாக்கப்பட்டமை தொடர்பாக இன்று (21) கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பிரதி கல்வி பணிப்பாளரான எஸ்.துஸ்யந்தன் என்பவரை இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதி பீ.உதயரூபன் கடமை நேரத்தில் தாக்கியதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பிரதி கல்வி பணிப்பாளர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். தாக்குதல் நடாத்திய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை-தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை 20 ஆம் திகதி மாகாண கல்வித் திணைக்களத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பான மேல்முறையீட்டு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பிரசன்னமாக இருந்த மேல் முறையீட்டு சபையின் பிரதிநிதி இல்லாத இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர் பீ.உதய ரூபன் கூட்டம் ஆரம்பிப்பதற்கு முதல் மாகாண கல்வி பணிப்பாளரை நோக்கி இழிசொல் பிரயோகம் செய்ததுடன், பிரதி கல்வி பணிப்பாளரை தாக்கியதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்து அலுவலக ஊழியர்கள் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அத்துடன் இப்போராட்டத்தை தொடர்ந்து இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.யீ.எம்.டபிள்யூ.ஜீ.
திஸாநாயக்ஙவிடம் மகஜர் கடிதத்தையும் கையளித்தனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content