இலங்கை

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ரங்கன் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான நிரந்தர பாதையை அமைத்துத் தருமாறு கோரி இன்று (24.09) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

ரங்கன் குடியிருப்பு பகுதியில் சுமார் 130 குடும்பங்கள் 28 வருடங்களாக வாழ்ந்து வரும் நிலையில் நிரந்தர பாதையில்லாமல் இன்னல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினை தொடர்பாக பல அரச அதிகாரிகளிடம் முறையிட்டுள்ள போதிலும், தீர்வு எட்டப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாதைக்கு தடையாக உள்ள காணி உரிமையாளர் இப்பகுதி மக்களின் நலன் கருதி வீதிக்கான காணியினை வழங்க முன்வரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்பொழுது காணியினை கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதன் காரணமாக வீதி ஊடாக இரவு வேலைகளில் பெரும் அச்சநிலையில் செல்லவேண்டியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து தமக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!