40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு – விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி
40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி, தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் நேரடித்தலையீட்டில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பார் அற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டது.
இதனால் இந்த பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம் கூறியதையடுத்து இந்த
வீதியினை JCB இயந்திரம் மூலம் துப்பரவு செய்து, பாவனைக்குரிய வீதியாக செப்பனிடப்பட்டுள்ளது.
இதன் போது பொது மக்கள் தவிசாளரின் இந்த செயற்பாட்டிற்கு நன்றி தெரிவித்தனர்.
150 மேற்பட்ட விவசாயிகளின் மிக நீண்ட நாள் கோரிக்கையாக அமைந்த இந்த பாதை இன்று திறக்கப்பட்டது.
தமக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை பார்ப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.





