ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் செல்லப்பிராணி மருத்துவக் கட்டணம் உயர்வு

பிரித்தானியாவில் செல்லப்பிராணிகளுக்கான மருத்துவக் கட்டணங்கள் கடந்த ஏழு ஆண்டுகளில் 63 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக பிபிசி பனோரமா (BBC Panorama) வெளியிட்டுள்ள புதிய புலனாய்வுத் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய நிறுவனங்களின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள், லாபத்தை அதிகரிக்க தேவையற்ற பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களை வற்புறுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஐவிசி எவிடென்சியா (IVC Evidensia) போன்ற பெரும் நிறுவனங்கள், ஒரு நோயாளிக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதைக் கண்காணிக்க ‘வண்ணக் குறியீடுகளை’ (Color coding) பயன்படுத்துவதாகவும், இது கூடுதல் செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதாகவும் கால்நடை மருத்துவர்களே கவலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு அறுவை சிகிச்சைக்காக 12,000 பவுண்டுகள் வரை கட்டணம் வசூலிக்கப்பட்ட நிகழ்வுகளும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தற்போது பிரிட்டனின் 60 சதவீத சந்தையை வெறும் ஆறு பெரிய நிறுவனங்களே கட்டுப்படுத்துவதால், போட்டிக் குறைந்து விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இது குறித்துத் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள அரசு கண்காணிப்பு அமைப்பு (CMA), வெளிப்படையான விலைப்பட்டியல் மற்றும் புதிய ஒழுங்குமுறை விதிகளை மார்ச் 2026-க்குள் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!