17 மாதங்களுக்கு பிறகு பொதுவில் தோன்றிய வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவர் டெல்சா சோலோர்சானோ(Delsa Solorzano) 17 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக பொதுவில் தோன்றியுள்ளார்.
சோலோர்சானோ பல மாதங்களுக்கு பிறகு தனது கட்சியின் தலைமையகத்திற்கு வருகை தந்தார், அங்கு அவருக்கு ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிக்கோலஸ் மதுரோவின்(Nicolas Maduro) வெளியேற்றத்திற்குப் பிறகு பொதுவில் தோன்றிய 54 வயதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், “அரசியல் மாற்றத்தைக் கொண்டுவரவும் அரசாங்கத்தை புதுப்பிக்கவும் புதிய தேர்தல்களுக்காகப் போராடுவதற்கும் தான் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சோலோர்சானோ கடைசியாக ஆகஸ்ட் மாதம் 2024ம் ஆண்டு மதுரோவின் மறுதேர்தல் வெற்றிக்கு எதிரான போராட்டத்தில் பொதுவில் தோன்றினார்.
அன்று அவருடன், அமைதிக்கான நோபல் பரிசை வென்ற மரியா கொரினா மச்சாடோவும்(María Corina Machado) தலைமறைவு, நாடுகடத்தல் அல்லது சிறையில் அடைக்கப்பட்ட பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் இருந்தனர்.




