இலங்கை

இலங்கையில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி வாகன இறக்குமதி!

போலியான ஆவணங்களை பயன்படுத்தி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிறிய கூப்பர் ரக வாகனமொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த மோசடி சம்பவம் நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றமை தெரியவந்துள்ளது.

இவ்வாறாக 400இற்கும் மேற்பட்ட வாகனங்கள், இறக்குமதி செய்யப்பட்டு சட்டவிரோதமான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

KE-3845 என்ற இலக்கம் கொண்ட இந்த வாகனம் இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்பில் போலியாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்,   2.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனம் கடந்த 2007 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை பயன்படுத்தி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 2015 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டியாக பதிவு செய்யப்பட்டதாக கொழும்பு பிரதான நீதவானிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content