இலங்கை

இலங்கையில் உச்சம் தொட்டது மரக்கறிகளின் விலைகள்!

இலங்கையில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29.12) ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 முதல் 900 ரூபா வரையிலும் விலை அதிகரித்துள்ளது.

இது தவிர கேரட், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பல வகையான காய்கறிகளின் விலையும் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய நிலவரப்படி உள்ளூர் சந்தையில் மலையகம் மற்றும் கீழ்நில மரக்கறி விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பூசணிக்காய் தற்போது 300 – 400 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மற்ற அனைத்து காய்கறி வகைகளின் விலையும் தற்போது 500-800 ரூபாய்க்குள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஒரு கிலோ பச்சை மிளகாய்  1400க்கும், நைமிளகாய் கிலோ ரூ.1500க்கும், தக்காளி கிலோ  600-800க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நத்தார் பண்டிகை முடிந்து ஒவ்வொரு ஆண்டும் காய்கறிகளின் விலை அதிகரிக்கும், ஆனால் அடுத்த ஆண்டு முதல் சில வாரங்களில் தேவைக்கேற்ப காய்கறிகள் வரத்து இருக்கும் என்பதால் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.

(Visited 51 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்