வட அமெரிக்கா

அமெரிக்கா- மன ஆறுதலுக்காக வீட்டில் 7 புலிகளை வளர்த்த நெவாடாவை சேர்ந்தத நபர் கைது

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே உள்ள பகுதியில் நபர் ஒருவர் தமது மன ஆறுதலுக்காக 7 புலிகளை வளர்த்துள்ளார்.

அவரின் சட்டவிரோத நடவடிக்கையை அறிந்த அதிகாரிகள் புலிகளை மீட்டு நபரைக் கைது செய்துள்ளனர்.கார்ல் மிட்சல் என்னும் அந்த 71 வயது முதியவர் ஏப்ரல் 2ஆம் திகதி அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

மிட்சலின் வீட்டில் புலிகள் வளர்க்கப்படுவதை அறிந்த அதிகாரிகள் அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது புலிகள் அடைக்கப்பட்ட கூண்டுகளின் சாவியை அதிகாரிகள் கேட்டபோது அதை மிட்சல் தர மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். புலிகள் தொடர்பான ஆவணங்களும் மிட்சலிடம் இல்லை. நபர்அன்றே பிணையில் வெளிவந்தார்.

மிட்சல் தனது மன ஆறுதலுக்காகப் புலிகளை வளர்த்ததாக விசாரணையில் தெரிவித்தார். நபர் புலிகளை எப்படி வாங்கினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிட்சல் வீட்டில் இருந்த ஏழு புலிகளும் பாதுகாப்பாக விலங்குநலக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்