உலகம் செய்தி

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவின் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போருக்கு அமெரிக்கா எவ்வாறு பதிலடி கொடுக்கப் போகிறது என்பதைப் பார்க்க உலகம் தற்போது காத்திருக்கிறது.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கான தனது 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்துள்ளமை விசேட அம்சமாகும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், தற்போதைய ஆபத்து சூழ்நிலையை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்றார்.

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எவரும் அமெரிக்கா விதித்துள்ள தடைகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை, ஈரான் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

ஈரான் மண்ணில் இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் முற்றாக அழிந்துவிடும் என அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!