வட அமெரிக்கா

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோருக்கான கூடுதல் தடுப்பு முகாம்கள் அமைக்க முடிவு

அமெரிக்காவில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்காக கூடுதல் தடுப்பு முகாம்களை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறை சார்பில், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தற்போது, 40 ஆயிரம் பேரை தடுப்புக்காவலில் வைக்கக்கூடிய அளவுக்கே கட்டமைப்புகள் உள்ளதாகவும், அதை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சமாக உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெக்சாஸ், கொலராடோ, இண்டியானா, நியூ ஜெர்சி மாகாணங்களில் உள்ள தடுப்புக் காவல் மையங்கள், ராணுவத் தளங்கள், சுங்க அமலாக்கத் துறை சிறைகளில் இந்தக் கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட உள்ளன.

புதிய குடியேற்ற தடுப்பு முகாம்கள் அமைக்க அமெரிக்க அரசு 45 பில்லியன் டொலரை ஒதுக்கியுள்ளது.

 

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!