அமெரிக்க ஜனாதிபதி வரி விதிப்பு – அவசரமாக சந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள்

அமெரிக்க ஜனாதிபதியின் வரி விதிப்பையடுத்து 4 முன்னாள் ஜனாதிபதிகள் திங்கட்கிழமை ஒரு கலந்துரையாடலுக்காக சந்திக்க உள்ளனர்.
நாளை பிற்பகல் கொழும்பில் அவர்கள் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இவ்வாறு சந்திக்க உள்ளனர்.
மேலும், இலங்கை மீது அமெரிக்கா விதித்த 44 சதவீத வரிகள் மற்றும் அதற்கு பதிலளிக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அவர்கள் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
(Visited 34 times, 1 visits today)