வட அமெரிக்கா

பைடன் மகன், மகளின் பாதுகாப்பு இரத்து – அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன், மகள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரகசிய சேவை பாதுகாப்பை ஜனாதிபதி டிரம்ப் இரத்து செய்து அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் முன்னாள் ஜனாதிபதிகளின் பதவியைவிட்டு செல்லும்போது அவரும், அவர்களது மனைவிக்கும் வாழ்நாள் முழுவதும் ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

ஆனால் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பானது பதவியை விட்டு விலகும்போது முடிவடைந்துவிடும்.

எனினும் டிரம்ப் மற்றும் பைடன் ஆகிய இருவரும் பதவியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தங்களது பிள்ளைகளின் பாதுகாப்பை 6 மாதங்களுக்கு நீட்டித்தனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனுக்கு 18 பாதுகாப்பு ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டனர்.

அவரது மகள் ஆஷ்லேவிற்கு 13 ஏஜென்ட்கள் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன், மகளுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு உடனடியாக இரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.

(Visited 19 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்