வட அமெரிக்கா

அமெரிக்காவில் கருப்பின கர்ப்பிணியை சாலையில் தள்ளி விட்டு கைது செய்த காவல் அதிகாரி!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கருப்பின கர்ப்பிணி ஒருவரை காவல் அதிகாரி கீழே தள்ளி விட்டு கைது செய்த காணொலி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் கருப்பின தம்பதியர் பொதுவெளியில் சண்டையிட்டு கொள்வதாம காவல் நிலையத்துக்கு புகார் வந்தது.

அங்கு சென்ற காவல் அதிகாரி மாத்யூ,காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த கர்ப்பிணியை கீயே இறங்குமாறு கூறினார்.

தான் 6மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவர் கைறியதை பொருட்படுத்தாமல் காரிலிருந்து வெளியே இழுத்த மத்யூ, கைகளை முதுகிற்கு பின்னால் முறுக்கி சாலையில் தள்ளிவிட்டு அவரை கைது செய்தார்.

காவல் அதிகாரி மாத்யூவின் இந்த மூர்க்கத்தனமான நடத்தை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்றது. உரிம்ம் இல்லாமல் கார் ஓட்டியது தொடர்பான வாசாரணைக்கு வர மறுத்த கருப்பின பெண்ணும் காவல் அதிகாரியை தாக்கியதாக அவரது கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 21 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்