பனாமா கால்வாயை இலவசமாகக் கடக்கும் வாய்ப்பை பெற்ற அமெரிக்க அரச கப்பல்கள்
பனாமா கால்வாயைக் கடக்கும் அமெரிக்காவின் அரசாங்கக் கப்பல்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சு இதனை கூறியுள்ளது.
பனாமா, கப்பல்களுக்கு அளவுக்கு அதிகமான கட்டணத்தை வசூலிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பலமுறை சாடியதை அடுத்து அந்த அறிவிப்பு வந்துள்ளது.
கால்வாயைத் தென் அமெரிக்க நாடான பனாமாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா 1977இல் ஒப்பந்தம் செய்துகொண்டது. கால்வாயை மீண்டும் வசமாக்கிக் கொள்ளப்போவதாக டிரம்ப் மிரட்டினார்.
கால்வாயைப் பாதுகாக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளது, அதனிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது அநியாயம் என்று டிரம்ப்பின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் பனாமாவின் அறிவிப்பால் அமெரிக்க அரசாங்கத்துக்கு மில்லியன்கணக்கில் செலவு மிச்சப்படும் என்று வெளியுறவு அமைச்சு கூறியது.
கால்வாயைப் பாதுகாக்க பனாமாவுடன் மேலும் நெருக்கமாகப் பணியாற்றவுள்ளதாகவும் அமெரிக்காவின் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.