இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

235 பில்லியன் டொலர் நட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி? நெருக்கடியில் டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்க மத்திய வங்கியின் தற்போதைய நிதிநிலை மிகுந்த கவலையளிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. கடந்த புதன்கிழமை வரை அதன் மொத்த நட்டம் 235 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் மீது வெள்ளை மாளிகை கடும் விமர்சனம் எழுப்பியுள்ளது.

“நாட்டு நிதி நிலையைச் சீர்செய்வதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், வங்கி தலைமையகமான வாஷிங்டன் DC கட்டிடத்தைப் பழுதுபார்த்துக் கொண்டு இருப்பது பொருத்தமற்றது,” என வெள்ளை மாளிகை நிர்வாகம் மற்றும் வரவுசெலவுத்திட்ட இயக்குநர் விமர்சித்துள்ளார்.

மேலும், வட்டியைக் குறைக்கும் முயற்சிகளை பவல் தவிர்ப்பது, ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கடுமையாகக் கண்டிக்கப்படுகிறது. வட்டி விகிதங்களை உயர்த்தியதனால், வங்கியின் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்தது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பவல் தலைமையிலான மத்திய வங்கி, அதன் தலைமையக கட்டிடத்தை மேம்படுத்த 2.5 பில்லியன் டாலரைத் தனியாக செலவழித்திருப்பதும் இந்த சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்க சட்டப்படி, மத்திய வங்கி அதன் வருவாய் லாபத்தை நிதியமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவருகிறது என்பது சீரியக் கேள்விகளை எழுப்புகிறது.

 

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
Skip to content