இஸ்ரேல் ஈரான் மோதலில் உள்நுழைந்த அமெரிக்கா : ஹவுதி படை வெளியிட்ட அறிவிப்பு!

இஸ்ரேல் ஈரான் இடையே நிலவி வந்த மோதலில் அமெரிக்கா தலையிட்ட பிறகு அங்கு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது.
ஒரு பக்கம் இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்கிறோம் என ஈரான் சரமாரியாகத் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் போரில் தாங்களும் நுழைந்துவிட்டதாக ஏமனைப் பெரும்பகுதி கட்டுப்படுத்தும் ஹவுதி படை அறிவித்துள்ளது.
ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஹவுதி படை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், உங்கள் கப்பல்களை எங்கள் கடல் எல்லையில் இருந்து வெளியேற்றுங்கள்.. இல்லையென்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஏமனின் ஹவுதி எச்சரித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)