ஈராக்கிலுள்ள அமெரிக்க தூதரகம்மீது ஏவுகணைத் தாக்குதல்!
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் Baghdad அமைந்துள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் இருக்கும் ஹெலிபேட் தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தூதரகம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.
ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களால் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
உலகின் மிகப்பெரிய தூதரகங்களில் ஒன்றான இந்த வளாகம், கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறது.
அமெரிக்க குடிமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் மத்திய கிழக்கு போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.





