சீனாவில் புதிய கோவிட் மாறுபாடு ஒன்றை கண்டுபிடித்த அமெரிக்கா

சீனாவில் புதிய கோவிட் மாறுபாடு ஒன்றைய அமெரிக்காவினால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோயாளிகள் ஏப்ரல் 22 முதல் மே 12 வரை சீனா, ஜப்பான், வியட்நாம், தென் கொரியா, தைவான், தாய்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய ஒன்பது நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
இந்த மாறுபாடு ஹவாய், ரோட் தீவு மற்றும் ஓஹியோவிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதத்தில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட கடுமையான சுவாச நோயாளிகளின் விகிதம் 3.3 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சீனாவின் தரவுகள் காட்டுகின்றன.
சீன அவசர சிகிச்சைப் பிரிவில் கோவிட் பரிசோதனை செய்யப்படும் நோயாளிகளின் விகிதம் 7.5 சதவீதத்திலிருந்து 16.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஹாங்காங்கில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, இதற்கு புதிய திரிபுதான் காரணம் என்று நம்பப்படுகிறது.