அடுத்த மாதம் வர்த்தகப் பேச்சுவார்த்தைக்காக இந்தியா வரும் அமெரிக்கக் குழு

இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்கான அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க குழு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு வருகை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்க குழுக்கள் கடந்த வாரம் வாஷிங்டனில் ஒப்பந்தத்திற்கான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தைகளை முடித்தன.
“அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக, அமெரிக்க குழு ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்தியாவுக்கு வருகை தரும்” என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக பரஸ்பர வரிகளை அறிவித்தார். அதிக வரிகளை அமல்படுத்துவது ஜூலை 9 வரை 90 நாட்களுக்கு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது, ஏனெனில் அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.