16 ஆம் திகதி விடைபெறும் அமெரிக்க தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chang , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை Anura Kumara Dissanayake சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி கொழும்பில் இருந்து வெளியேறுகின்றார் அமெரிக்க தூதுவர் ஜூலி சாங்.
இந்நிலையில் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
இதன்போது, ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி பாராட்டினார்.
அத்துடன், ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு நன்றியைத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.
2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற ஜூலி சாங், இரு தரப்பு உறவுகளை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.





