செய்தி வட அமெரிக்கா

தூதரகத்திற்கு வெளியே தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழப்பு

வாஷிங்டன் டிசியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் முன் அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

அந்த நபர் டெக்சாஸின் சான் அன்டோனியோவைச் சேர்ந்த 25 வயதான ஆரோன் புஷ்னெல்என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டது.

அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் அமெரிக்க இரகசிய சேவையின் அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

தீக்குளிக்கும் முன், “இனி இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று கூறினார்.

அவர் “ஒரு தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக” கூறினார். தனக்குத் தானே தீக்குளித்துக்கொண்ட பிறகு, “பாலஸ்தீனத்தை விடுதலை செய்” என்று பலமுறை முழக்கமிட்டார்.

வாஷிங்டனில் உள்ள பெருநகர காவல் துறை “வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை” என்று கூறியது.

இந்த சம்பவத்தில் தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content